குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான சுதீப் தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். தமிழில் 'முடிஞ்சா இவன புடி' என்றும் கன்னடத்தில் 'கோட்டிகோபா-2' என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே நடிகர் சுதீப்புடன் நெருக்கம் காட்டி வருகிறார்.. இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சுதீப் தன்னுடைய மிகச்சிறந்த நண்பர் என நித்யா கூறினாலும், இவர்கள் காதலை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பேட்டியிலும் சுதீப்பை பற்றி ஏதாவது புகழ்ந்து கூறிக்கொண்டுதான் இருக்கிறார் நித்யா மேனன். தான் ஒரு படத்தை இயக்கினால் அதில் நிச்சயம் சுதீப் தான் ஹீரோவாக இருப்பார் என ஓப்பனாகவே சொல்கிறாராம் நித்யா மேனன். ஒவ்வொருமுறை சுதீப்பை பார்க்கும்போதும் அவருக்கான ஒரு கேரக்டரை எழுதத்தான் தூண்டுகிறாராம் சுதீப்..
அதேசமயம் மற்ற நடிகர்களை பார்க்கும்போது இந்த எண்ணம் அவருக்கு ஏற்படுவதில்லையாம். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர் சுதீப் என்றும், அவரிடம் இரண்டு மூன்று கதைகளை நித்யா மேனன் கூறியதாகவும் அதில் ஏதாவது ஒன்றை படமாக இயக்க நித்யா மேனன் விரும்பினால் அதில் தானும் பங்களிப்பு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினாராம் சுதீப். யார் கண்டது விரைவில் அப்படி ஒரு அறிவிப்பை நித்யா மேனன் வெளியிட்டாலும் வெளியிடலாம்.