சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தங்கள் திரை உலக பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி தனது 150வது திரைப்படமான கத்திலான்டோடு திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படத்தை வரலாற்று பின்னணியிலும் உருவாக்கி வருகின்றார்.
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் அவரது 100வது படத்திற்கு பிரபல வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றார். அதே போல் இயக்குனர் விவி விநாயக் இயக்கும் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கும் சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றாராம். ஒரே நேரத்தில் சரித்திர படத்திற்கும், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படத்திற்கு சாய் மாதவ் வசனம் எழுதுகின்றார்.
முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் பணியாற்றும் பெருமை சாய் மாதவ் போல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் கிடைத்துள்ளது. சிரஞ்சீவியின் கத்திலான்டோடு, மற்றும் பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சாதர்கனி என இருபடங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இவ்விரு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.