குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
படப்பிடிப்பின்போது சில அமானுஷ்ய சக்திகளை உணர்ந்தோம்,, பேய் இருப்பது உண்மை தான் என சில படக்குழுவினர் தங்களது அனுபவங்களை சொல்வதுண்டு. குறிப்பாக பேய்ப்படங்களை எடுக்கும் படக்குழுவினர் தான் இதை அதிகமாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முன்னர் பலமுறை இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அவை உண்மையா இல்லை படத்தின் பப்ளிசிட்டிக்காக சொல்லப்படுகின்றனவா என்பது சம்பந்தப்பட்ட படக்குழுவினர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இப்போது அதேபோல சில அமானுஷ்ய நடவடிக்கைகளால் மிரண்டு போயிருக்கிறார்கள் பிருத்விராஜ் நடித்து வரும் 'எஸ்ரா' படக்குழுவினர்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தபோது திடீரென அனைத்து விளக்குகளும் தானாகவே எரிந்தனவாம். ஆனால் கனெக்சன்கள் அனைத்தும் சரியாகவே இருந்தனவாம். சர்.. ஜெனரேட்டர் கோளாறாக இருக்கலாம் என நினைத்து வேறு ஜெனரேட்டரை மாற்றினால் அதிமுக்கியமான கேமரா சாதனங்கள் உடனே பழுதடைந்தனவாம். படத்தின் கதாநாயகியாக நடிக்கும் பிரியா ஆனந்த் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தாராம். இதனால் கலவரமான யூனிட்டார் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து சில சம்பிரதாய சடங்குகளையும் பரிகாரங்களையும் செய்தபின்னர் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.