சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்த பிரியா ஆனந்திற்கு கிட்டத்தட்ட இது இலையுதிர்காலம் போலத்தான்.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ள பிரியா ஆனந்த் இந்த வருடம் மலையாளத்திலும் கன்னடத்திலும் முதன்முறையாக கால் பதித்துள்ளார். மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியாக 'எஸ்ரா' என்கிற படத்திலும், கன்னடத்தில் புனித ராஜ்குமார் படத்திலும் நடித்து வருகிறார். இதில் மலையாளத்தில் இவர் நடிப்பது ஹாரர் படமாகும்.. தற்போது இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் பிரியா அனந்த்.
“தமிழில் சில பேய்ப்படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்றில் எல்லாம் பெரும்பாலும் ஏற்கனவே வந்த படங்களின் கிளிஷேக்கள் நிறைய இருந்ததால் அவற்றை தவிர்த்துவிட்டேன்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் ஜெயகிருஷ்ணன் என்னிடம் 'எஸ்ரா' படத்தின் கதையையும் எனது கேரக்டரையும் பற்றி சொல்லும்போது கேட்பதற்கே நடுக்கமாக இருந்தது.. அதுமட்டுமா, இந்த ஒருவாரம் தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன்.. ஆனால் தினசரி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பும்போது நடுக்கத்துடனேயே தான் கிளம்பி போகிறேன்.. அந்த அளவுக்கு இந்தப்படம் புதுவிதமான ஹாரர் த்ரில்லராக இருக்கும்” என்கிறார் பிரியா ஆனந்த்.