குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அண்மையில் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினார். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். முன்னாள் பாலிவுட் கனவு கன்னி ஹேமமாலினி இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இப்படத்தின் நாயகியை இன்னும் படக்குழு தேர்வு செய்யவில்லை.
அனுஷ்கா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனராம். தற்போது நடிகை ஸ்ரேயா இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறபடுகின்றது. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ஊபிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரேயா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் திரை உலகில் அவரது இரண்டாவது சுற்றிற்கு இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும்.