ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் |
தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய அளவிலான கார்ட்டூன் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கார்ட்டூன் அகாடமி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் சில தினங்களுக்கு முன் அதாவது தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் மோகன்லால். அங்கே இருந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்ட மோகன்லால், ஸ்மைலிஸ் குறியீடுகள் வரையப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அப்போது கார்டூனிஸ்ட்டுகளை வாழ்த்தி பேசிய மோகன்லால், “ஓராயிரம் வார்த்தைகள் சேர்ந்து சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கார்ட்டூன் சொல்லிவிடும்.. அவ்வளவு ஏன் ஒரு செய்தித்தாள் வாசித்த உணர்வை ஒரு கார்ட்டூனே தந்துவிடும். நம் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.சங்கர் என்பவரின் கார்ட்டூன்களில் தனது படம் இடம்பிடிப்பதை பெருமையாக நினைத்தார்” என கார்ட்டூனிஸ்ட்டுகளை பாராட்டியதோடு கார்ட்டூனிஸ்ட்டுகளால் தான் அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.