நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
பாகுபலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நிலமோசடி வழக்கில் சிக்கி உள்ளார். பிரபல தெலுங்குபடத் தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் ஆந்திர மாநிலம் ராம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமவுலி மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐதராபாத், பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டை ராஜமவுலி விற்க முன்வந்தார், அதனை நான் 42 லட்சம் ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு 2.7 லட்சம் முன் பணமாக கொடுத்தேன். அதன் பிறகுதான் அந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் எதுவும் சொல்லாமல் வேறொருவருக்கு வீட்டை விற்று விட்டார். எனது பணத்தை மோசடி செய்துவிட்டார். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து ராஜமவுலி வருகிற 24ந் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதோடு ராஜமவுலி நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது.