சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 150வது நாளை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். கேரள மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொன்னதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முதல் படி.. இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப்படத்திற்காக ஏழு வருடங்கள் தன்னை வருத்திக்கொண்டு தந்த கடின உழைப்பு இரண்டாவது படி..
மொய்தீன்-காஞ்சனமாலாவாக திரையில் தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்ட பிருத்விராஜ்-பார்வதியின் அபார நடிப்பு வெற்றிக்கான மூன்றாவது படியாக அமைந்தது. இந்தப்படத்தின் 150வது நாள் வெற்றிவிழாவை கொச்சியில் உள்ள கோகுலம் டவரில் வைத்து கொண்டாடி படக்குழுவினர் அனைவருக்கும் 150வது நாள் ஷீல்டு வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விழாவில் பிருத்விராஜ்-பார்வதி, படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் மற்றும் படக்குழுவினர், திரையுலக வி.ஐ.பிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.