சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் தோள்பட்டையில் அறுவை சிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிபட்டு வந்த சிரஞ்சீவி கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷனில் ஓட்டு போடுவதையும் தவிர்த்து விட்டு அறுவை சிகிச்சை செய்ய மும்பைக்கு சென்றார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த சிரஞ்சீவி நலமுடன் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஓய்விற்கு பின்னர் சிரஞ்சீவி தனது 150வது படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது.