சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கேரளாவில் ஹிட் படங்களின் திருட்டு விசிடிகள் தொடர்ந்து வெளியாவது தயாரிப்பாளர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. நம்ம ஊரைப்போல் இல்லாமல் கேரளாவில் திருடத் விசிடி விற்பது வெகுவாக குறைவுதான். இருந்தாலும் அங்கும் சில, பைரேட் மாபியாக்கள் ஊடுருவிவிட்டார்கள். “பைரஸியை நிறுத்துங்கள் எப்படி எங்களை வேறொருவரின் யோசனைகளை, சிந்தனைகளை திருடக்கூடாது என்கிறீர்களோ, அதேபோல எங்களது படங்களையும் யாரும் திருடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படத்திற்கு அதற்குண்டான சன்மானம் கிடைக்க வழி செய்யுங்கள்” என பிரேமம் படத்தின் திருட்டு விசிடி வெளியானபோது எதிர்ப்புக்குரல் கொடுத்தார் மம்முட்டி.
பிரேமம் பட விவகாரத்துக்குப்பின் கொஞ்சநாள் அடங்கியிருந்தபோது போல இருந்த இந்த கும்பல், இப்போது பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'அமர் அக்பர் அந்தோணி' படத்தின் திருட்டு விசிடியை விற்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கேரளா திக்கரக்கரா போலீஸார், இந்தப்படத்தின் சிடிக்களை சப்ளை செய்த ஸ்ரீகாந்த் என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் வசம் இருந்த படத்தின் மொத்த டிவிடிகளையும் மற்றும் சில படங்களின் டிவிடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.