அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த ''தனி ஒருவன்'' திரைப்படம் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. இப்படத்தில் வில்லனாக மட்டுமில்லாமல் மற்றுமொரு நாயகனாகவும் நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் ஜெயம் ரவி வேடத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். நடிகர் அரவிந்த் சாமி தெலுங்கு ரீமேக்கிலும் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி ரூ.3 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்.வி.பிரசாத் ஆகியோர் அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரவிந்த் சாமி சம்பள விசயத்தில் இறங்கி வரவில்லை எனில் வேறு நடிகரை அணுகவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.