சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிருத்விராஜின் கேரியர் கிராப்பை பொறுத்தவரை சி.ஆர்.டி மானிட்டரில் பார்க்கும் அலைகள் போலத்தான். ஒன்று ஏறி, ஒன்று இறங்கினாலும் மார்க்கெட் மட்டும் ஸ்டெடியாக இருக்கும்.. அப்படித்தான் இந்த வருட துவக்கத்தில் வெளியான 'பிக்கெட்-43' ஹிட்டடிக்க, அடுத்து வெளியான 'இவிடே' பிளாப் ஆனது. தொடர்ந்து போன மாதம் வெளியான 'டபுள் பேரல்' படம் வந்த சுவடும் தெரியவில்லை.. போன தடமும் தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் வெற்றி பிருத்விராஜின் வருத்தங்களை எல்லாம் துடைத்து எறிந்துவிட்டது.
நான்ஸ்டாப் ரன்னிங்கில் ஓடிக்கொண்டிருக்கும் 'என்னு நிண்டே மொய்தீன்' வசூலில் எகிடு தகிடாக தூள் கிளப்புகிறது. இந்த வருடத்தில் 'பிரேமம்' படத்தை அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் இதுதான். அதுமட்டுமல்ல, இதுநாள் வரையிலான பிருத்விராஜ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்திருப்பதும் இந்தப்படம் தான்.. தற்போது போட்டிக்கு தகுந்த ஆள் இல்லாததால் தனிக்காட்டு ராஜாவாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்தப்படத்திற்கு பிருத்விராஜின் இன்னொரு படமான 'அமர் அக்பர் ஆண்டனி' ஸ்பீடு பிரேக்கராக அமையும் என சொல்லப்படுகிறது..
காரணம் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தை இந்த மாதம் 16 அல்லது 23ஆம் தேதி ரிலீஸ் பண்ணப்போவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.. ஒருதரப்பினர் இது மொய்தீன் பட வசூலை பாதித்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்க, இன்னொரு தரப்போ, மொய்தீன் அலையில் இந்தப்படம் அடித்துக்கொண்டு போகாமல் இருந்தால் சரி.. அதனால் அந்தப்படத்தை கொஞ்சநாள் கழித்து வெளியிடுவதுதான் நல்லது என்று கூறிவருகிறார்கள்.. பிருத்விராஜுடன் அவரது அண்ணன் இந்திரஜித், ஜெயசூர்யா மற்றும் நமீதா பிரமோத் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ள நாதிர்ஷா இயக்கியுள்ளார்.