சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான 'பாடிகார்டு' படத்திற்குப்பின் மலையாளத்தில் நடிப்பதில் மிகப்பெரிய இடைவெளி விட்டிருந்தார் நயன்தாரா. அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது தாய்மொழியான மலையாளத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாம் என புது கொள்கையை உருவாக்கி கொண்டார் நயன்தாரா. அதுவும் கூட இந்த வருடத்தில் போனால் போகிறதென்று அவராக உருவாக்கி கொண்டதுதான். அந்தவகையில் மம்முட்டியுடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடித்தவருக்கு மலையாள ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்தனர்..
இந்த வரவேற்பை எதிர்பாராத நயன்தாராவுக்கு, நடிக்க வந்த இந்த 12 வருடங்களில் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் திரையுலகிலேயே அமர்ந்துகொண்டு, தனது சொந்த மண்ணான மலையாள ரசிகர்களை புறக்கணித்து விட்டோமே என ஒரு குற்ற உணர்வு தோன்றியது. இனி என்ன பிடிவாதம் என அப்போதே மெல்ட் ஆன நயன்தாரா, ஜீத்து ஜோசப் தான் இயக்கிய 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தில் நடிக்க அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வர அதையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அதனால் இனி வரும் வருடங்களில் மலையாள ரசிகர்களுக்கு நயன்தாராவின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும் என்பது உறுதி.