கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
சாதாரண மனிதர்களுக்கே தாங்கள் வாங்கும் வாகனங்களுக்கு பேன்சியான பதிவு எண் கிடைக்க வேண்டும் என ஆர்வம் இருக்கும்போது பிரபலங்கள் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? அந்த வகையில் கேரளாவில் தற்போது மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன், நிவின் பாலி இருவரும் சமீபத்தில் புதிய கார்களை வாங்கினார்கள். இந்த காருக்கு தாங்கள் விரும்பிய பதிவு எண் வேண்டும் என கேட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் குஞ்சாக்கோ போபன் 0459 என்கிற எண் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது ஒன்றும் அவ்வளவு பேன்சியான நம்பர் இல்லை என்பதால் போட்டி எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் இந்த நம்பருக்கு திடீரென டிமாண்ட் அதிகரித்து பல பேர் இதை வேண்டுமென விண்ணப்பிக்க இந்த தகவல் தெரிந்ததும் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த நம்பரை தனக்காக பதிவு செய்து விட்டார் குஞ்சாக்கோ போபன்.
அதேபோல நடிகர் நிவின்பாலி தனக்கு 0011 என்கிற நம்பர் வேண்டுமென விண்ணப்பித்திருந்தார். இது அடிப்படையிலேயே பேன்சி நம்பர் என்பதால் இதற்கு நிறைய போட்டி இருந்தது. போட்டித் தொகையை ஒவ்வொருவரும் உயர்த்திக் கொண்டே வர ஒரு கட்டத்தில் இந்த எண்ணுக்காக 2.34 லட்சம் ரூபாயை பதிவுத்தொகையாக தர நிவின் பாலி ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதே எண் தான் தங்களுக்கும் வேண்டும் என கேட்ட இன்னொரு தனியார் நிறுவனம் 2.95 லட்சம் வரை தந்து அந்த நம்பரை கைப்பற்றி விட்டது.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் 001 என்கிற எண்ணுக்கு 25.52 லட்சம் ரூபாயும் 007 என்கிற எண்ணுக்கு 46.24 லட்சம் என அந்த பேன்சி நம்பர்களை பெற போட்டி போட்டு பணம் கட்டி பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இந்த வகையிலேயே கோடிக்கணக்கில் அதிகாரப்பூர்வ வருமானம் வருகிறது என்பது ஆச்சரியம் தான்.