ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் ஏற்கனவே 2009ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆர்யா 2 திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தையும் இயக்குனர் சுகுமார் தான் இயக்கியிருந்தார். புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அதேபோல இந்த ஆர்யா 2 திரைப்படத்திற்கும் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முந்தி அடித்ததுடன் நேற்று சனிகிழமை பல காட்சிகள் ஹவுஸ்புல்லாக நிரம்பின.
அதேசமயம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான துயர சம்பவம் நிகழ்ந்தது. பலியான அந்தப் பெண்ணின் மகன் காயம் பட்டு தற்போது மூளை சாவு அடைந்த நிலையில் இருக்கிறார். இந்த சமயத்தில் தியேட்டரில் அல்லு அர்ஜுன் திடீரென படம் பார்க்க வந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல அந்த சமயத்தில் போதிய அளவு தியேட்டரில் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை.
அந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது ஆர்யா 2 வெளியான பல திரையரங்குகளில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தி எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அவர்கள் கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டனர். இதனால் ஆர்யா 2 திரையிடப்பட்ட எந்த திரையரங்குகளிலும் பிரச்னைகள் ஏதும் இன்றி படம் திரையிடப்பட்டது.