ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த 2019-ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது எம்புரான் என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். படம் ஓரளவு நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் தேவையில்லாத மத சர்ச்சைகளில் சிக்கியதுடன் இன்னொரு பக்கம் முதல் பாகம் போல இல்லையே என்கிற விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார் பிரித்விராஜ். இரண்டாம் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்திற்கு அஸ்ரேல் என டைட்டில் வைக்கப்படலாம் என இந்த படத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்புரான் படத்தின் கிளைமாக்ஸில் உஷா உதூப் குரலில் இடம் பெற்ற பாடலில் இந்த அஸ்ரேல் என்கிற வார்த்தை இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி மூன்றாம் பாகத்திற்கு இது பொருத்தமான டைட்டிலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.