அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார் பிருத்விராஜ். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசையும் நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்திருந்த இரண்டு அதிரடி பாடல்களும் முக்கியமாக தூண்களாக அமைந்திருந்தன.
இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலரிலேயே தனது மிரட்டலான பின்னணி இசை மூலம் அதிக எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தார் தீபக் தேவ். இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிறிய பகுதியை பாடுவதற்கு ஒரு புதிய பெண் குரல் ஒன்றை தேடி வந்தார் தீபக் தேவ். அப்போது பிரித்விராஜின் மகள் அலங்க்ரிதாவின் குரலை கேட்டதும் அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் அந்த பாடலை பாட வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பிரித்விராஜன் மனைவி ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில் அவரது மகளும் சினிமாவில் இந்த பாடல் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல பிரித்விராஜின் சகோதரர் நடிகர் இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனாவும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.