சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து கடந்த 2019ல் லூசிபர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் இன்று 27ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் இதிலும் நடித்துள்ளனர். பல புதிய நடிகர்கள் பாலிவுட்டில் இருந்து மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில் இருந்தும் இதில் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்த படத்தின் வில்லன் யார் என்பது இப்போது வரை அறிவிக்கப்படாமல் சஸ்பென்ஸ் ஆகவே வைக்கப்பட்டுள்ளது.
லூசிபர் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். படத்தின் கதைப்படி கிளைமாக்ஸில் அவர் கொல்லப்படுகிறார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் கேரள அரசியல் கதைக்களத்துடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தையும் தீவிரமாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளதால் வில்லன் கதாபாத்திரமும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் குறித்து அவரது பின்புற தோற்றத்துடன் உருவான போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.. அதை பார்த்துவிட்டு பல பேர் அது நடிகர் பஹத் பாசில் தான் என்று கூறினார்கள்.
ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் பிரித்விராஜ். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அமீர் கான் என்றும், இல்லையில்லை டே ஆப்டர் டுமாரோ படத்தில் வில்லனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ரிக் யுனே தான் அவர் என்றும் ரசிகர்கள் பலர் ஆருடம் கூறி வருகிறார்கள். அனேகமாக நாளை படம் வெளியான பிறகு தான் இந்த கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார் என்பது தெரியவரும்.