வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மலையாள சினிமாவில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களாக இணைந்து பணியாற்றியுள்ள 'மும்தா' என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தை பர்ஷானா பினி அசாபர் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கலை என அழைத்து தொழில்நுட்ப கலைஞர்களுமே பெண்கள் தான்.
அதே சமயம் படத்தில் வழக்கம் போல ஆண், பெண் என அனைத்து கலைஞர்களும் இதில் நடித்திருக்கின்றனர். காசர்கோடு பகுதியை சார்ந்தவர்களின் வாழ்வியலாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மகளிர் தினமான மார்ச் எட்டாம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்குள் இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்கள் என்பதும் ஒரு ஆச்சர்யம் தான்.




