விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'யமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி |

மலையாள திரையுலகில் இயங்கி வரும் மலையாள நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் இன்னோசென்ட் பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் மோகன்லால் இதன் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டுகள் காரணமாக மலையாள சங்கத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மீண்டும் விரைவில் மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் வழக்கம் போல மோகன்லால் உள்ளிட்டோர் தொடர்ந்து கவனம் செலுத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் மலையாள திரையுலகில் ரொம்பவே வயதான நடிகர்களுக்கு அவர்கள் கடைசி காலம் நிம்மதியாக கழிய வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கம் சார்பில் ஓய்வு கிராமம் ஒன்றை துவங்கி செயல்படுத்த நடிகர் மோகன்லால் ஆலோசனை செய்து வந்தார். இதற்கு மம்முட்டி, சுரேஷ் கோபி போன்ற மற்ற முன்னணி நடிகர்களிடம் இருந்தும் பல நடிகர் சங்க உறுப்பினர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சீவனி என்கிற பெயரில் இந்த ஓய்வு கிராமத்திற்கான துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.