கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மலையாள திரையுலகில் இயங்கி வரும் மலையாள நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் இன்னோசென்ட் பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் மோகன்லால் இதன் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டுகள் காரணமாக மலையாள சங்கத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மீண்டும் விரைவில் மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் வழக்கம் போல மோகன்லால் உள்ளிட்டோர் தொடர்ந்து கவனம் செலுத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் மலையாள திரையுலகில் ரொம்பவே வயதான நடிகர்களுக்கு அவர்கள் கடைசி காலம் நிம்மதியாக கழிய வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கம் சார்பில் ஓய்வு கிராமம் ஒன்றை துவங்கி செயல்படுத்த நடிகர் மோகன்லால் ஆலோசனை செய்து வந்தார். இதற்கு மம்முட்டி, சுரேஷ் கோபி போன்ற மற்ற முன்னணி நடிகர்களிடம் இருந்தும் பல நடிகர் சங்க உறுப்பினர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சீவனி என்கிற பெயரில் இந்த ஓய்வு கிராமத்திற்கான துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.