டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
மலையாள திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக இளம் முன்னணி நடிகராக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூலும் செய்தது. அது மட்டுமல்ல பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குஜராத்தில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கே நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் உன்னி முகுந்தன்.
அப்போது அவர் பேசுகையில், “நான் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.. 2009ல் தான் கேரளாவிற்கு இடம் பெயர்ந்தேன். இங்கே உள்ள பள்ளி, கல்லூரிகளில் தான் படித்தேன். இங்கே வரும் போதெல்லாம் என்னுடைய பழைய ஞாபகங்கள் தானாகவே வந்து விடுகின்றன. அந்த வகையில் நான் பாதி குஜராத்திக்காரன் தான். ஒரு முறை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது அவரிடம் நான் குஜராத்திக்காரன் என்றும். நான் குஜராத்தில் இருந்தபோது நீங்கள் தான் எனக்கு முதல்வராக இருந்தீர்கள், இப்போது நீங்கள் தான் எனக்கு பிரதமராகவும் இருக்கிறீர்கள் என சொன்னபோது மிகுந்த ஆச்சரியப்பட்டார். அது மட்டுமல்ல ஒரு குஜராத்தி பையன் மலையாள திரைப்படங்களில் நடித்து சாதித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் என்னை பாராட்டினார். அவரது பாராட்டு எனது அதிர்ஷ்டம். எனக்கு குஜராத்தி மொழியில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஏனென்றால் என்னால் குஜராத்தி மொழியில் சரளமாக பேச முடியும்” என்று கூறினார்.