‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

பாலிவுட்டையும் தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாகவே வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த வருடம் அவரது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் இதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி சமீபத்தில் தான் இந்த சீசனும் முடிவு பெற்றது. அதேபோலத்தான் கன்னடத்திலும் கடந்த 11 வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனாலும் சினிமாவில் தான் இன்னும் தீவிர கவனம் செலுத்தப் போவதாக இந்த 11வது சீசன் துவங்கும்போதே கூறியிருந்த கிச்சா சுதீப், இந்த சீசனுடன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியிலேயே தான் விடை பெறுவதாக ரசிகர்களிடம் அறிவித்தார் கிச்சா சுதீப். இதைத்தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.