சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்த ரெக்கசித்திரம் என்கிற படம் வெளியானது, 1985களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மம்முட்டி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான பிரிஸ்ட் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து அடுத்து இவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. இந்த படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்புடன் வசூலையும் குவித்து வருகிறது. இதில் முக்கிய அம்சமாக நடிகர் மம்முட்டி கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காரணம் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்தால் மட்டுமே அது சரியாக இருக்கும் என்பதால் தான்.
அதுமட்டுமல்ல மம்முட்டி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பிரிஸ்ட் படத்தின் மூலம் தனக்கு வெற்றியை தேடி தந்த இயக்குனரின் படம் என்பது ஒரு காரணம். மேலும் தான் நடித்த ரோஷாக் என்கிற படத்தில் தன் வேண்டுகோளை ஏற்று முகமே காட்டாமல் ஒரு கோஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஆசிப் அலிக்காக நன்றி கடன் காட்டும் விதமாக நடித்தார் என்பது இன்னொரு காரணம். அது மட்டுமல்ல சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த விழாவிலும் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இப்படி ஒரு படம் வெற்றி பெறும்போது அதற்கு மக்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றும் கூறினார்.