கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஹனிரோஸ் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் சில நபர்களின் சைபர் தாக்குதலுக்கு ஆளானவர், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 பேர் மீது புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவமானப்படுத்தும் விதமாக பேசி வந்த பிரபலமான நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர் என்பவரும் இந்த புகாருக்கு ஆளாகி போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மீடியா ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்கிற நபர் சோசியல் மீடியாவில் தன்னை குறித்து அவதூறாக வெளியிட்ட கமெண்ட்டுகள் தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தூண்டும் அளவிற்கு இருந்தது என்று கூறி அவர் மீதும் ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் விண்ணப்பித்திருந்தார் ராகுல் ஈஸ்வர்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் பிரச்சனையின் அடிப்படையில் ராகுல் ஈஸ்வருக்கு முன்ஜாமின் தர மறுத்துவிட்டது. அதே சமயம் போலீசார் இது குறித்த விசாரணையை தொடர்ந்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதன் பெயரில் தான் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.