22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று மிக பெரிய அளவில் வெளியானது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் அதையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை முதல் பாகத்தின் வெற்றி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் படங்களே கூட இந்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டதும் ஆச்சரியம்தான்.
இந்த படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜதாரா என்கிற ஒரு நடனம் அதற்காக அல்லு அர்ஜுன் சேலை அணிந்தபடி ஒரு பெண் சாமியார் போல நடனமாடுவதும் அதன் பிறகு எதிரிகளை துவம்சம் செய்வதும் என கிட்டத்தட்ட 19 நிமிட நீளமான காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரபு நாடுகளில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட போது இது மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 19 நிமிட காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டு தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.