நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்த படங்களின் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதேபோல ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்துகொண்டு தான் இருந்தனர். இந்த நிலையில் ராம்சரண் மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் ஆகியோர் தங்களது இன்னும் சில தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் கிளம்பி சென்றுள்ளனர். கணவர்கள் உள்ளூரில் வேலையில் பிஸியாக இருக்க, இவர்கள் மாலத்தீவில் தோழிகளுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.