பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலைசெய்த வழக்கில் கைதாகி 100 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்து 6 வாரங்கள் இடைக்கால ஜாமின் பெற்று வீடு திரும்பியுள்ளார் தர்ஷன்.
இந்தநிலையில் கன்னட தொலைக்காட்சி நடிகரும் தற்போது நடந்து கொண்டிருக்கும் கன்னட பிக் பாஸ் சீசன் 11ல் பங்கேற்று சமீபத்தில் எவிக்ட் ஆன போட்டியாளருமான வழக்கறிஞர் ஜெகதீஷ் என்பவர் தர்ஷன் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ஜெகதீஷ் கூறும்போது, “நான் நடிகர் தர்ஷனை விமர்சித்து பேசியதற்காக அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது தான் அதிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளேன். தர்ஷனின் ரசிகர்கள் மீண்டும் என்னை தாக்க முயற்சிக்கலாம். இதன் பின்னணிகள் தர்ஷன் தான் தூண்டுகோலாக இருந்து செயல்படுகிறார். அதனால் அவர்களிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த தர்ஷன் ரசிகர்கள் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும் தர்ஷன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.