மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ? | 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! |
எபி அருண் இயக்கத்தில், துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள கன்னடப் படம் 'மார்ட்டின்'. பான் இந்தியா படமாக இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்கள். கர்நாடகாவில் துருவ் சர்ஜாவுக்கென தனி மார்க்கெட் உண்டு. அதனால், அங்கு இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 மணிக்கும் நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் திடீரென எழுந்த சிக்கல் காரணமாக படம் தாமதமாக காலை 10 மணிக்குத்தான் திரையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் கூட பத்துக்கும் குறைவான காட்சிகளே கிடைத்துள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' நேற்று வெளியானதால் அப்படம்தான் தமிழக அளவில் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.
அதே சமயம் பெங்களூருவில் 'வேட்டையன், மார்ட்டின்' ஆகிய இரண்டு படங்களுக்குமே தினமும் சுமார் 500 காட்சிகள் வரை தியேட்டர்கள் கிடைத்துள்ளது.