பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

எபி அருண் இயக்கத்தில், துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள கன்னடப் படம் 'மார்ட்டின்'. பான் இந்தியா படமாக இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்கள். கர்நாடகாவில் துருவ் சர்ஜாவுக்கென தனி மார்க்கெட் உண்டு. அதனால், அங்கு இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 மணிக்கும் நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் திடீரென எழுந்த சிக்கல் காரணமாக படம் தாமதமாக காலை 10 மணிக்குத்தான் திரையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் கூட பத்துக்கும் குறைவான காட்சிகளே கிடைத்துள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' நேற்று வெளியானதால் அப்படம்தான் தமிழக அளவில் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.
அதே சமயம் பெங்களூருவில் 'வேட்டையன், மார்ட்டின்' ஆகிய இரண்டு படங்களுக்குமே தினமும் சுமார் 500 காட்சிகள் வரை தியேட்டர்கள் கிடைத்துள்ளது.