இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. கடந்த 2017ல் இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் இவை எல்லாம் உண்மைதான் என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்பட கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களில் சில ஆண்களும் உடனடியாக இந்த அறிக்கையை வரவேற்று கருத்துக்களை கூறினார் ஆனால் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி திலீப் உள்ளிட்டோர் இது பற்றி அறிக்கை வெளியிட சில நாட்கள் வரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தனர்.
மேலும் நடிகர் சங்க தலைவரான மோகன்லால் ஒரு தலைவராக இந்த அறிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே தனது பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்தார். அதேசமயம் மோகன்லாலின் மனைவி சுசித்ராவுக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அது தொடர்பாக அவருடன் மோகன்லால் சென்னையில் இருந்து சிகிச்சைக்கான பணிகளை கவனித்து வந்தார் என்பதால் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து அவர் உடனடியாக பதில் எதுவும் கூறவில்லை என்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரும் மலையாள தொழிலாளர் சங்க தலைவருமான இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தான் ராஜினாமா செய்வது குறித்து முன்கூட்டியே மோகன்லால் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன், மோகன்லால் உள்ளிட்டோர் பொறுப்புகளில் இருக்கும்போதே இது குறித்து பதில் அளித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தானும் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.