இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் அந்தஸ்தில் பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக அரசியல் பயணத்தையும் துவக்கிய சுரேஷ்கோபி தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு திருச்சூர் எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டு தற்போது மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவரது மகள் பாக்யாவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் முன்னிலையில் திருச்சூரில் நடைபெற்றது.
சுரேஷ்கோபியின் மூத்த மகன் கோகுல் சுரேஷ் ஒரு நடிகராக சில வருடங்களுக்கு முன்பே திரையுலகில் நுழைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ்கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷ் விரைவில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‛கும்மாட்டி களி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னும் முதல் படம் வெளியாகாத நிலையில் தற்போது காதலில் விழுந்துள்ளார் மாதவ் சுரேஷ். மலையாளத்தில் ‛ரணம்' என்கிற படத்தில் நடித்த செலின் ஜோசப் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் மாதவ் சுரேஷ்.
சமீபத்தில் செலினின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த மாதவ், தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், “இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரின் பிறந்தநாள். என்னுடைய வாழ்க்கையில் நான் கடுமையான சூழலில் இருந்த நிலையில் எதிர்பாராமல் என் வாழ்க்கையில் நுழைந்து எனக்கு பின்னால் ஒரு பாறையாக நிற்பவர். யாருடைய புன்னகை என்னுடைய நாளை பிரகாசமாக்குமோ, யாருடைய சத்தம் என் காதுகளில் இசை போல கேட்குமோ, யாருடைய வருகையால் எனக்கு உடனடி உற்சாகம் கிடைக்குமோ அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.