ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண். 'உய்யாலா ஜம்பால' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். தற்போது திரகம்பர சாமி, பாலே உன்னாலே படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கும் ராஜ் தருண் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ராஜ் தருண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.