சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான முன்னணி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்திய அவர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அதே சமயம் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கேரளாவில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லை என்கிற நிலையில் முதன்முதலாக அந்த பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் சுரேஷ்கோபி.
அவரது வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சுரேஷ்கோபியும் நண்பருமான மம்முட்டி, சுரேஷ்கோபி நடிக்க உள்ள அடுத்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது என்கிற அறிவிப்பை சூட்டோடு சூடாக வெளியிட்டு தனது வாழ்த்துகளை சுரேஷ்கோபிக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தை யார் இயக்க உள்ளார்கள், மேலும் இதில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் யார் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.