காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூட மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி ஏதேனும் கட்டாய தேவை இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பார்கள் (சிபிஐ பாகங்கள் போல). அதனால் மலையாளத்தில் இரண்டாம் பாக படங்கள் வெளியாவது ரொம்பவே குறைவு. இந்த நிலையில் தான் 'ஆடு' என்கிற படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015ல் 'ஆடு' படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சீரியல் கொலையை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'அஞ்சாம் பாதிரா' என்கிற படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து 2017ல் ஆடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது.
தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதே கூட்டணியில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மூன்று பாகங்களின் தயாரிப்பாளர், மலையாள நடிகர் விஜய் பாபு தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பலாத்கார வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.