கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மலையாளத்தில் திரிஷ்யம்
என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்
ஜீத்து ஜோசப். தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான வெற்றிப்
படங்களை கொடுத்து இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர் என்கிற பெயரையும்
பெற்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்களையும் தாண்டி
வெப்சீரிஸ் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால்
இயக்குனராக அல்ல, ஒரு தயாரிப்பாளராக.. ஆம் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக
'ரோஸ்லின் ; சீக்ரெட் ஸ்டோரீஸ்' என்கிற வெப்சீரிஸை தயாரிக்கிறார் ஜீத்து
ஜோசப்.
இந்த வெப்சீரிஸை இவரிடமும் இன்னொரு பிரபல இயக்குனரான அன்வர்
ரஷீத்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர்
இயக்குகிறார். அதுமட்டுமல்ல இந்த வெப்சீரிஸுக்கு விநாயகன் சசிகுமார்
என்பவர் தான் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்தவகையில் இந்த வெப்சீரிஸில்
ஜீத்து ஜோசப்பின் பங்கு வெறும் தயாரிப்பாளர் மட்டுமே. கடந்த சில
தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.