பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் திரிஷ்யம்
என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்
ஜீத்து ஜோசப். தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான வெற்றிப்
படங்களை கொடுத்து இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர் என்கிற பெயரையும்
பெற்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்களையும் தாண்டி
வெப்சீரிஸ் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால்
இயக்குனராக அல்ல, ஒரு தயாரிப்பாளராக.. ஆம் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக
'ரோஸ்லின் ; சீக்ரெட் ஸ்டோரீஸ்' என்கிற வெப்சீரிஸை தயாரிக்கிறார் ஜீத்து
ஜோசப்.
இந்த வெப்சீரிஸை இவரிடமும் இன்னொரு பிரபல இயக்குனரான அன்வர்
ரஷீத்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர்
இயக்குகிறார். அதுமட்டுமல்ல இந்த வெப்சீரிஸுக்கு விநாயகன் சசிகுமார்
என்பவர் தான் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்தவகையில் இந்த வெப்சீரிஸில்
ஜீத்து ஜோசப்பின் பங்கு வெறும் தயாரிப்பாளர் மட்டுமே. கடந்த சில
தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.