தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

மலையாளத்தில் திரிஷ்யம்
என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்
ஜீத்து ஜோசப். தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான வெற்றிப்
படங்களை கொடுத்து இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர் என்கிற பெயரையும்
பெற்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்களையும் தாண்டி
வெப்சீரிஸ் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால்
இயக்குனராக அல்ல, ஒரு தயாரிப்பாளராக.. ஆம் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக
'ரோஸ்லின் ; சீக்ரெட் ஸ்டோரீஸ்' என்கிற வெப்சீரிஸை தயாரிக்கிறார் ஜீத்து
ஜோசப்.
இந்த வெப்சீரிஸை இவரிடமும் இன்னொரு பிரபல இயக்குனரான அன்வர்
ரஷீத்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர்
இயக்குகிறார். அதுமட்டுமல்ல இந்த வெப்சீரிஸுக்கு விநாயகன் சசிகுமார்
என்பவர் தான் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்தவகையில் இந்த வெப்சீரிஸில்
ஜீத்து ஜோசப்பின் பங்கு வெறும் தயாரிப்பாளர் மட்டுமே. கடந்த சில
தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.