மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி |
மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அதிலும் இரண்டு படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடியை தொட்டுள்ளன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது இந்தப் படத்தை கிரிஸ் ஏடி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகனான எஸ்.எஸ் கார்த்திகேயா பெற்றுள்ளார். வரும் மார்ச்சில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அதன் முதல் கட்டமாக பாகுபலி பாணியில் இந்த படத்தின் புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தில் பிரபாஸும் அனுஷ்காவும் இணைந்து அம்பு விட்டது போல இந்த பிரேமலு ஜோடி ஒன்றாக இணைந்து காதல் அம்புகளை தொடுப்பதாக போன்று இந்த புரோமோ அமைந்துள்ளது.