மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
திரிஷ்யம் படத்தின் மூலம் மலையாள திரைலகில் ஒரு புதிய வெற்றி கூட்டணியை மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. கொரோனா தாக்கத்திற்கு முன்பாக மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை ஜீத்து ஜோசப் துவங்கினார். அதன்பின் அந்தபடம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து நேரு என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பிரியாமணி மோகன்லாலுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையப்படுத்தி, ஒரு பிரபல வழக்கை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் மோகன்லால் பிரியாமணி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உருவான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ல் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.