கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
திரிஷ்யம் படத்தின் மூலம் மலையாள திரைலகில் ஒரு புதிய வெற்றி கூட்டணியை மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. கொரோனா தாக்கத்திற்கு முன்பாக மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை ஜீத்து ஜோசப் துவங்கினார். அதன்பின் அந்தபடம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து நேரு என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பிரியாமணி மோகன்லாலுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையப்படுத்தி, ஒரு பிரபல வழக்கை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் மோகன்லால் பிரியாமணி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உருவான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ல் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.