பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர நடிகரான மேத்யூ தேவசி என்பவரைத்தான். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். அதன்பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 10 முதல் 12 இயக்குனர்கள் வரை இவர்கள் கூறியும் பல காரணங்களால் அவர்கள் அனைவருமே இந்த படத்தை இயக்க மறுத்து விட்டனர்.
இறுதியாக இயக்குனர் ஜியோ பேபியிடம் இந்த கதையை கொண்டு சென்றபோது அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையைக் கூற, மம்முட்டிக்கும் இந்த கதை பிடித்துப்போய் விட்டது. அதில் நடித்ததன் மூலம் தற்போது இன்னும் ஒரு வெற்றி படத்திற்கு சொந்தக்காரராக மம்முட்டி மாறிவிட்டார்.