திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர நடிகரான மேத்யூ தேவசி என்பவரைத்தான். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். அதன்பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 10 முதல் 12 இயக்குனர்கள் வரை இவர்கள் கூறியும் பல காரணங்களால் அவர்கள் அனைவருமே இந்த படத்தை இயக்க மறுத்து விட்டனர்.
இறுதியாக இயக்குனர் ஜியோ பேபியிடம் இந்த கதையை கொண்டு சென்றபோது அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையைக் கூற, மம்முட்டிக்கும் இந்த கதை பிடித்துப்போய் விட்டது. அதில் நடித்ததன் மூலம் தற்போது இன்னும் ஒரு வெற்றி படத்திற்கு சொந்தக்காரராக மம்முட்டி மாறிவிட்டார்.