தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர நடிகரான மேத்யூ தேவசி என்பவரைத்தான். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். அதன்பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 10 முதல் 12 இயக்குனர்கள் வரை இவர்கள் கூறியும் பல காரணங்களால் அவர்கள் அனைவருமே இந்த படத்தை இயக்க மறுத்து விட்டனர்.
இறுதியாக இயக்குனர் ஜியோ பேபியிடம் இந்த கதையை கொண்டு சென்றபோது அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையைக் கூற, மம்முட்டிக்கும் இந்த கதை பிடித்துப்போய் விட்டது. அதில் நடித்ததன் மூலம் தற்போது இன்னும் ஒரு வெற்றி படத்திற்கு சொந்தக்காரராக மம்முட்டி மாறிவிட்டார்.