சிறையில் இருந்து வந்தபின் முதன்முறையாக குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய தர்ஷன் | மலையாளத்தில் நரி வேட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சேரன் | படத்தின் நீளம் குறித்த பாலாவின் பேச்சுக்கு வரவேற்பு : விமர்சனத்திற்கு ஆளான ஷங்கரின் பதில் | பாலகிருஷ்ணாவுடன் நடனம் : கிண்டலடித்த ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுட்டேலா பதிலடி | ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு |
மலையாள திரை உலகில் காமெடி, ஆக்ஷன் என இரண்டு ஏரியாவிலும் திறமை காட்டக்கூடிய அதே சமயம் குடும்ப பார்வையாளர்களையும் அதிக அளவில் தன் வசம் வைத்திருக்க கூடியவர் நடிகர் திலீப். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஒரு சிறிய சரிவை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் பிஸியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு ஏற்கனவே ஹிட் கொடுத்த ராம்லீலா பட இயக்குநர் அருண்கோபி இயக்கத்தில் திலீப், தமன்னா நடித்து வரும் படம் பாந்த்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் பத்தாம் தேதி வெளியாகும் என திலீப்பின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அறிமுக இயக்குனர் ரதீஸ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் தங்கமணி என்கிற படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே திலீப் நடிப்பில் உருவாகி பாதியில் நிற்கும் புரபசர் டிங்கன் என்கிற படத்தை பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தற்போது கைப்பற்றியுள்ளது என்றும் இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.