வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மலையாள சினிமாவில் குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் குந்தரா ஜானி. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1979-ம் ஆண்டு 'நித்யா வசந்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜானி 'மீன்', 'பரங்கிமலை', 'கரிம்பனா', 'காட்பாதர்', 'நாடோடிகாற்று', 'பரத்சந்திரன் ஐபிஎஸ்', 'ஸ்படிகம்' உள்ளிட்டவை முக்கியமான படங்கள்.
71 வயதான குந்தரா ஜானி கொல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.