திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர். தர்பார் மற்றும் அண்ணாத்த என இரண்டு படங்களின் சரிவுக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்த் படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, பீஸ்ட் பட விமர்சனங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் நெல்சன் இணைந்ததால் இந்தபடம் மீதான எதிர்பார்ப்பு, தமிழை தாண்டி மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் இருந்தது.
அந்த வகையில் கேரள தியேட்டர்களில் கிட்டத்தட்ட 80 சதவீத காட்சிகள் ஜெயிலர் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. படம் வெளியானதில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மாலை மற்றும் இரவு காட்சிகள் இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக நள்ளிரவையும் தாண்டி பல தியேட்டர்களில் 3 மணிக்கு கூட காட்சிகள் திரையிடப்பட்டன. ஏற்கனவே கேரளாவில் முன்பதிவில் சாதனை செய்திருந்த ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூலிலும் அசத்தி உள்ளது.