அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐ ஸ்மார்ட் ஷங்கர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அடுத்த வருட மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை வைஷ்ணவி சைதன்யா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.