காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுதான். ஒரு பக்கம் ஆஸ்கர் விருதுகளை பெறுவது பெருமை என்கிற போட்டியில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பலரும் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த 2023ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்களை தேர்வு செய்வதற்கு என 398 பேர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த பட்டியலில் பெரிதாக வெளியே தெரியாமல் போன இன்னொரு நபரும் இருக்கிறார். அவர்தான் கேரளாவை சேர்ந்த விஎப்எக்ஸ் நிபுணர் சனத். இவர் மலையாளத்தில் புலிமுருகன், தெலுங்கில் பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு விஎப்எக்ஸ் பணியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர். தற்போது ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம் பெறுபவர்கள் 19 வகையான பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் விஎப்எக்ஸ் பிரிவில் சனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.




