சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூஜாபுரா ரவி. 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 83 வயதான அவர் முதுமை தந்த உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த அவருக்கு , நேற்று காலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். பூஜப்புரா ரவி மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த பூஜப்புரா ரவி 1976 முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கள்ளன் கப்பலில் தன்னேக, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ, அம்மிணி அம்மாவன், முத்தாரம்குன்னு பிஓ, கிலுக்கம் உள்பட 800க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.. கடைசியாக 2016ல் 'கப்பி' என்ற படத்தில் நடித்திருந்தார்.