ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூஜாபுரா ரவி. 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 83 வயதான அவர் முதுமை தந்த உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த அவருக்கு , நேற்று காலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். பூஜப்புரா ரவி மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த பூஜப்புரா ரவி 1976 முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கள்ளன் கப்பலில் தன்னேக, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ, அம்மிணி அம்மாவன், முத்தாரம்குன்னு பிஓ, கிலுக்கம் உள்பட 800க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.. கடைசியாக 2016ல் 'கப்பி' என்ற படத்தில் நடித்திருந்தார்.