நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் கோடிகளில் வசூலையும் குவித்தன. சமீபத்தில் கூட கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதே சமயம் கடந்த 2018ல் உன்னி முகுந்தன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். தான் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் குறித்து பேசுவதற்காக ரிசார்ட் ஒன்றுக்கு தன்னை அழைத்த உன்னி முகுந்தன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே சம்பந்தப்பட்ட அந்த பெண் இப்படி தவறாக புகார் அளித்திருக்கிறார் என்றும் இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் அளித்த சம்பந்தப்பட்ட பெண் இந்த வழக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டதால் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல தொடரும் என்று கூறி உன்னி முகுந்தனின் மனுவை நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் உயர்நீதிமன்றத்தின் மீண்டும் தாக்கல் செய்த மனுவில் தங்கள் இருவரின் வழக்கு கவுன்சிலிங் மூலம் செட்டில் செய்யப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்த அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.