22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
வெளிநாடுகளில் புகழ்பெற்று, முதல் முதலாக இங்கே ஹிந்தியில் துவங்கப்பட்டு வரவேற்பை பெற்ற பிக்பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோ, பின்னர் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் தொகுத்து வழங்க மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் நான்கு சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதேசமயம் கடந்த நான்காவது சீசனில் மோகன்லால் தொகுத்து வழங்குவது பற்றி நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக அவர் போட்டியாளர்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று அதிகம் சொல்லப்பட்டு வந்தது. மேலும் இதற்கு மிக சரியான நபராக ஆக்சன் கிங் என அழைக்கப்படும் சுரேஷ்கோபி தான் பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர்.
இதனால் இந்த பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளரில் மாற்றம் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த கட்டமாக இந்த புதிய சீசனுக்காக வெளியாக இருக்கும் புரோமோவுக்கான படப்பிடிப்பில் தற்போது மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த சீசன் எப்போது இருந்து துவங்கும் என்பது குறித்த இந்த புரோமோ விரைவில் வெளியாகும் என தெரிகிறது.