தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் கர்நாடக மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் கர்நாடக மாநில திரைத்துறையினர், விளையாட்டு துறையினரை அழைத்து பேசினார். குறிப்பாக கேஜிஎப் பட குழுவினரையும், காந்தாரா படக்குழுவினரையும் அழைத்து பாராட்டினார். இந்தச் சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ரிஷப் ஷெட்டி கூறுகையில், ‛‛பாரத பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கை நாங்கள் விவாதித்தோம். பிரதமரின் தொலைநோக்குத் தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அந்த ஊக்கம் எங்களின் மிகப்பெரிய பலம்'' என பதிவிட்டுள்ளார்.