மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ். தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வருகிறார். அடுத்து அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
லிஜோ ஜோஸ் - மோகன்லால் இணையும் படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் மலையாளம், தமிழில் தயாராகிறது. படத்தின் தலைப்பும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்று பக்காவான தமிழில் வைக்கப்பட்டுள்ளது.