தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகருமான கிருஷ்ணா சமீபத்தில் காலமானார். அதுமட்டுமல்ல இந்த வருடத்திலேயே இதற்கு முன்னதாக மகேஷ்பாபுவின் அண்ணன் மற்றும் அவரது அம்மா ஆகியோர் அடுத்து அடுத்து காலமானார்கள், அப்படி தனது குடும்பத்தில் உள்ள நபர்களை ஒவ்வொருவராக பறிகொடுத்த மகேஷ்பாபு சமீபத்திய அவரது தந்தையின் மரணத்தால் ரொம்பவே மனமொடிந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், இசையமைப்பாளர் தமன் மற்றும் தனது மனைவி நம்ரதா உள்ளிட்ட சிலருடன் கலந்து கொண்டார். அப்போது அங்கே அவர்களுக்கு வீட்டில் சமைத்த பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா. அந்த புகைப்படத்தில் மகேஷ்பாபு படக்குழுவினருடன் சிரித்தபடி காட்சியளிப்பதை பார்க்கும்போது அவர் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்பதையே காட்டுகிறது