காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
தெலுங்கில் இப்போதும் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் சிரஞ்சீவி, இளம் படைப்பாளிகளின், வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி முற்றிலும் புதுமுகங்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்தும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, 'புதுமுகங்கள் நடித்த படம் தானே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல கன்டெண்ட் இருந்தால் நிச்சயமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். சமீபத்தில் அப்படி வெளியான பிம்பிசாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்து படம் பார்க்க வைக்கும் விதமாக இருந்தது. கன்டன்ட் தான் அதற்கு காரணம். கன்டென்ட் இல்லை என்றால் இரண்டாவது நாளே தியேட்டர் காலியாகிவிடும். அது என் படமாக இருந்தாலும் கூட அதுதான் ரிசல்ட். அப்படி சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்” என்று சமீபத்தில் வெளியான தனது ஆச்சார்யா, படத்தின் தோல்வி குறித்து பேச்சுவாக்கில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சிரஞ்சீவி.