இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கில் இப்போதும் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் சிரஞ்சீவி, இளம் படைப்பாளிகளின், வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி முற்றிலும் புதுமுகங்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்தும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, 'புதுமுகங்கள் நடித்த படம் தானே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல கன்டெண்ட் இருந்தால் நிச்சயமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். சமீபத்தில் அப்படி வெளியான பிம்பிசாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்து படம் பார்க்க வைக்கும் விதமாக இருந்தது. கன்டன்ட் தான் அதற்கு காரணம். கன்டென்ட் இல்லை என்றால் இரண்டாவது நாளே தியேட்டர் காலியாகிவிடும். அது என் படமாக இருந்தாலும் கூட அதுதான் ரிசல்ட். அப்படி சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்” என்று சமீபத்தில் வெளியான தனது ஆச்சார்யா, படத்தின் தோல்வி குறித்து பேச்சுவாக்கில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சிரஞ்சீவி.