சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள காப்பா என்கிற படத்தில் முதன்முறையாக திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரித்விராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான் என்றாலும் சினிமாவுக்காக கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்ட மிக நீண்ட நடை மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் பிரித்விராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், கல்லூரியில் தான் படித்தபோது, இதே மார்க்கெட் வீதிகளில், பலமுறை பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்றதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கி அவர்களின் கண்டிப்புக்கு ஆளானதாகவும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் திருவனந்தபுரம் தனது சொந்த ஊர் என்றாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்ததில்லை என்றும் தற்போது தான் நடித்து வரும் காப்பா என்கிற படத்தில் தனது சொந்த ஊர் பாஷையை பேசி நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.